search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது தகராறு"

    ஊத்துமலை அருகே குடித்து விட்டு வந்ததை குடும்பத்தினர் சத்தம் போட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    ஊத்துமலை அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி அருள் (வயது50), விவசாயி. இவர் தினசரி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர்கள் அவரை சத்தம் போட்டனர். இதில் மனமுடைந்த அந்தோணி அருள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×